எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.. விமானப்படை தளபதி பதவுரியா அறிவிப்பு
டெல்லி: சீனாவுடனான, உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் தற்போதைய பதற்ற நிலைமை அமைதியாக தீர்க்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா தெரிவித்தார்.
பதற்ற நிலைமை அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
நமது பிராந்தியத்தில் உள்ள தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையால், நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

உடனடியாக தயார் நிலை
லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் நிலவரம், குறுகிய காலத்தில் நாம் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான, ஒரு படிப்பினையாகும். இப்போது குறுகிய காலத்திலும் தயாராகும் யுக்திகளை நாம் கற்றுக்கொண்டுவிட்டோம்.

பதில்
எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், தக்க பதிலை தர நாங்கள் முழு அளவில் ஆயத்தமாக உள்ளோம் என்ற தகவலை தேசத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். கல்வானின் துணிச்சலானவர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டேன் என்று அவர் மேலும் கூறினார்.

சமாளிக்க ரெடி
நாங்கள் நிலைமையை அறிந்திருக்கிறோம். எல்லைக்கு அப்பால் அவர்களின் விமான பலம், அவர்களின் முகாம்கள் என அனைத்தையும் நாங்கள் அறிந்துதான் வைத்துள்ளோம். மேலும் எந்தவொரு சூழ்நிலையை சமாளிக்கவும், போதிய அளவுக்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு பதவுரியா தெரிவித்தார்.

காஷ்மீர் பயணம்
இதனிடையே பதவுரியா, 2 நாட்கள் பயணமாக காஷ்மீருக்கு சென்றதாகவும், அங்கே இந்திய விமானப்படை நிலைகளை ஆய்வு செய்து வழிகாட்டியதாகவும், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications