ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்காவுக்கு பேரிடி.. செக் வைத்த இந்தியா! கை கோர்க்கும் EU
டெல்லி: அமெரிக்காவின் வரி காரணமாக ஆட்டோ மொபைல் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பாதிப்பிலிருந்து இந்தியாவை மீட்க, மத்திய அரசு ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன்படி, இனி ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்க கைக்கொடுக்கும்.
அமெரிக்கா, தனது நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு கார்களுக்கு வரியை ஏற்றியிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்தியா, வரியை குறைத்திருப்பது, பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தற்போது ஐரோப்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு.. இந்தியா 70% முதல் 110% வரை வரியை விதித்து வருகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி இந்த வரி விதிப்பு 40% ஆக குறைக்கப்படும். வருங்காலத்தில் இது 10% வரை குறைக்கப்படும்.
இப்படி வரி குறிப்பை செய்வதன் மூலம், ஆடம்பர கார் நிறுவனங்கள் மிகப்பெரிய பலனடையும். குறிப்பாக போக்ஸ்வேகன், மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் பயனடையும். குறைந்தது ரூ.14 லட்சம் மதிப்பு கொண்ட கார்களில் இருந்து இந்த வரிச்சலுகை தொடங்கும். ரூ.14 லட்சத்துக்கு அதிகமான விலை கொண்ட கார்களுக்கு மட்டுமே வரி சலுகை கொடுக்கப்படும். இப்படி ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்களுக்கு இந்த சலுகை வழங்கப்படலாம்.
அதே நேரம், இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்திருக்கிறது. எனவே, இந்த முதலீடுகளை பாதுகாக்கும் விதமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு அமலுக்கு வரும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா தனது நாட்டுக்குள் வரும் கார்களுக்கு வரியை குறைப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். இந்த வரிக்குறிப்பு ஜனவரி 27 முதல் நம்மளுக்கு வருகிறது. அன்றைய தினம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு நடைபெறுகிறது. அதில் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications