ஆட்டோமொபைல் துறையில் அமெரிக்காவுக்கு பேரிடி.. செக் வைத்த இந்தியா! கை கோர்க்கும் EU
டெல்லி: அமெரிக்காவின் வரி காரணமாக ஆட்டோ மொபைல் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பாதிப்பிலிருந்து இந்தியாவை மீட்க, மத்திய அரசு ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதன்படி, இனி ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் நெருக்கடியை சமாளிக்க கைக்கொடுக்கும்.
அமெரிக்கா, தனது நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு கார்களுக்கு வரியை ஏற்றியிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்தியா, வரியை குறைத்திருப்பது, பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தற்போது ஐரோப்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு.. இந்தியா 70% முதல் 110% வரை வரியை விதித்து வருகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி இந்த வரி விதிப்பு 40% ஆக குறைக்கப்படும். வருங்காலத்தில் இது 10% வரை குறைக்கப்படும்.
இப்படி வரி குறிப்பை செய்வதன் மூலம், ஆடம்பர கார் நிறுவனங்கள் மிகப்பெரிய பலனடையும். குறிப்பாக போக்ஸ்வேகன், மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் பயனடையும். குறைந்தது ரூ.14 லட்சம் மதிப்பு கொண்ட கார்களில் இருந்து இந்த வரிச்சலுகை தொடங்கும். ரூ.14 லட்சத்துக்கு அதிகமான விலை கொண்ட கார்களுக்கு மட்டுமே வரி சலுகை கொடுக்கப்படும். இப்படி ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்களுக்கு இந்த சலுகை வழங்கப்படலாம்.
அதே நேரம், இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்திருக்கிறது. எனவே, இந்த முதலீடுகளை பாதுகாக்கும் விதமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு அமலுக்கு வரும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா தனது நாட்டுக்குள் வரும் கார்களுக்கு வரியை குறைப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். இந்த வரிக்குறிப்பு ஜனவரி 27 முதல் நம்மளுக்கு வருகிறது. அன்றைய தினம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு நடைபெறுகிறது. அதில் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
-
அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications