பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு
டெல்லி: இந்தியாவின் எரிசக்தி விநியோகம் முழுமையாகவும் நிலையாகவும் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நேற்றும், நேற்று முன்தினமும் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று வதந்தி பரவியது. இப்படி இருக்கையில், மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
நாட்டில் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜிக்கு பற்றாக்குறை இல்லை. அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் போதுமான விநியோகத்துடன் சாதாரணமாக இயங்குகின்றன என மத்திய அரசு தெளிவுப்படுத்தியிருக்கிறது.

அரசு உறுதியாக இருக்கிறது
தவறான தகவல்கள் பீதியைத் தூண்டும் . தவறான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. மக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடையற்ற எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் எல்பிஜி (LPG) இருப்பு முற்றிலும் பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதாக மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. அனைத்து பெட்ரோல் பங்க் மற்றும் எரிவாயு நிலையங்களிலும் போதிய அளவு இருப்பு உள்ளது. நாட்டில் எங்கும் தட்டுப்பாடு இல்லை.
எரிபொருள் இருப்பு
உலக அளவில் சுத்திகரிப்புத் திறனில் இந்தியா 4-வது இடத்திலும், ஏற்றுமதியில் 5-வது இடத்திலும் உள்ளது. நாம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்கிறோம். எனவே, உள்நாட்டுத் தேவைக்கான எரிபொருள் இருப்பு என்பது இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் சுத்திகரிப்புத் திறனில் இந்தியா 4-வது இடத்திலும், ஏற்றுமதியில் 5-வது இடத்திலும் உள்ளது. நாம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்கிறோம். எனவே, உள்நாட்டுத் தேவைக்கான எரிபொருள் இருப்பு என்பது இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு சரியாகிவிட்டது
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கான கடன் காலம் 1 நாளிலிருந்து 3 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் சிக்கல் இருந்தாலும், உலகின் 41-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது. குறிப்பாக மேற்கு நாடுகளிலிருந்து வரும் அதிகப்படியானவரத்து, ஹார்முஸ் தடையால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்துவிட்டது.
74 நாட்களுக்கு இருப்பு உள்ளது
அனைத்து இந்திய சுத்திகரிப்பு நிலையங்களும் 100% திறனுடன் இயங்கி வருகின்றன. அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவில் 6 நாட்கள் மட்டுமே இருப்பு இருப்பதாகப் பரவும் செய்திகள் தவறானவை. இந்தியாவின் மொத்த சேமிப்புத் திறன் 74 நாட்கள் ஆகும். தற்போது நம்மிடம் 60 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு (கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து) உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி
உலக அளவில் என்ன நடந்தாலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தியக் குடிமக்களுக்குத் தங்குதடையின்றி விநியோகம் செய்ய முடியும். மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, உள்நாட்டுச் சுத்திகரிப்பு நிலையங்களில் எல்பிஜி உற்பத்தி 40% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தினசரி தேவையில் 60% (50 TMT) உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
வந்துக்கொண்டிருக்கிறது
மீதமுள்ள தேவைக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து எல்பிஜி கப்பல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தினசரி 50 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இடையில் பீதியினால் 89 லட்சமாக உயர்ந்த சிலிண்டர் தேவை, தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு (50 லட்சம்) திரும்பியுள்ளது.
குழாய் மூலம் எரிவாயு
குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயு (PNG) மலிவானது, பாதுகாப்பானது மற்றும் தூய்மையானது என்பதால் அது ஊக்குவிக்கப்படுகிறது. எல்பிஜி தீர்ந்துவிட்டதால் பிஎன்ஜி-க்கு மாறச் சொல்வதாகப் பரவும் தகவல் முற்றிலும் பொய். இது இந்தியாவின் நீண்டகால எரிசக்தித் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே.
சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்களையும், வெளிநாடுகளில் நிலவும் வரிசைகளையும் காட்டி இந்தியாவில் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் குறித்து பீதியை ஏற்படுத்துவது குற்றமாகும். பொதுமக்கள் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!














Click it and Unblock the Notifications