உள்நாட்டு தயாரிப்பு...ஹைபர்சோனிக் ஏவுகணை...சோதனை வெற்றி...அமெரிக்காவுடன் இணைந்த இந்தியா!!
டெல்லி: ரஷ்யா, சீனா, அமெரிக்காவை அடுத்து சத்தத்தை விட விரைந்து செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை, ஒடிசாவில் இருக்கும் பாலசோரில், டாக்டர் அப்துல் கலாம் ஏவுகணை தளத்தில் இருந்து இன்று இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. சத்தத்தைவிட ஆறு மடங்கு விரைந்து சென்று தாக்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை.
Recommended Video
இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணை அடுத்தகட்டமாக நிலப்பரப்பு இலக்குகளை வைத்து தாக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. அக்னி ஏவுகணை போஸ்டர் கொண்டு இந்த ஏவுகணை இன்று காலை 11.03 மணிக்கு பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனை ஐந்தே நிமிடங்களில் நடந்து முடிந்தது.
இதையடுத்து, ஹைபர்சோனிக் ஏவுகணை தயாரிக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஏவுகணையை தயாரிக்கும். இன்று பரிசோதனைதான் முடிந்துள்ளது. இந்த வகையிலான ஹைபர்சொனிக் ஏவுகணை ஒரு விநாடியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்று தாக்கும் திறன் படைத்தாக இருக்கும்.

இன்றைய சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி முன்னின்று நடத்தினார். காற்று அழுத்தம், காற்று உள்ளிழுப்பு, குறைந்த காற்று என்று அனைத்து மட்டங்களிலும் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்னி பூஸ்டர் தாங்கிச் சென்று 38 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்ற பின்னர் ஏவுகணையை பிரித்தது. இதில் இருந்து அப்போது ஏற்பட்ட தீப்பிழம்பு சுமார் 20 வினாடிகள் நீடித்தது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனைக்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். ஆத்மநிர்பர் பாரத் என்ற திட்டத்தை நினைவாக்கும் விதமாக இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகளிடம் பேசினேன். அவர்களது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இவர்களால் இன்று இந்தியா கவுரவமடைந்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications