இலங்கை ராணுவத்தின் திறன் கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தும்: கொழும்பு கருத்தரங்கில் உறுதி!
டெல்லி: இலங்கை ராணுவத்தின் திறன் கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தும் என்று கொழும்பு கருத்தரங்கில் இந்திய தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய - இலங்கை ராணுவக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கண்காட்சியை இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பிரேமிதா பண்டாரா தென்னகூன் தொடங்கி வைத்தார். இருநாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை தொடர்பான தங்களது உற்பத்திப் பொருட்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தன.

இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் கிரிதர் அரமனே, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தியாவின் கடல்சார் கொள்கை அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதக் குடியேற்றம் போன்றவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பொதுவான சவால்கள் என்று கூறிய கிரிதர் அரமனே, இவற்றை எதிர்கொள்ள மேலும் அதிக ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications