இந்தியாவில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது: பயோகான் கிரண் மஜூம்தார் ஷா
டெல்லி: பிறநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா கூறியுள்ளார்.
Bloomberg India Economic Forum நிகழ்ச்சியில் பங்கேற்ற பயோகான் மருந்துகள் தயாரிப்பு நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா கூறியதாவது:
இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் சிறப்பாக உள்ளது. ஆனால் பிற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டால் தற்போதைய நிலையில் அதை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நாம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா தற்போது கொரோனாவிடம் இருந்து தப்பி பாதுகாப்பான நிலையில் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் சரியான சிகிச்சைகளால் கொரோனா மரணங்கள் கணிசமாக குறைந்தும் இருக்கின்றன. கொரோனா இறப்பு விகிதம் எப்போது ஜீரோவுக்கு வருகிறதோ அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற நிலைமை உருவாகும்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லை. இது இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்துவது என்பது சவாலானதாக இருக்கும். இவ்வாறு கிரண் மஜூம்தார் ஷா கூறினார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications