ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மூடல்- தூதர்,அதிகாரிகள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்!
டெல்லி: ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் வசமான நிலையில் அந்த நாட்டுக்கான இந்திய தூதரகம் மூடப்பட்டது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
Recommended Video
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை நடத்தினார். இதனால் 20 ஆண்டுகளாக தாலிபான் (தலிபான்கள், தாலிபன்கள்) தங்களது வாலை சுருட்டிக் கொண்டு இருந்தனர்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறின. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணத்தையும் படிப்படியாக தங்களது வசம் கொண்டு வந்தனர்.

சரணடைந்த அரசு படைகள்
அமெரிக்கா படைகள் இருந்த வரை ஆப்கானிஸ்தான் ராணுவமும் தாலிபான்களுடன் மோதியது. ஆனால் அமெரிக்கா படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே ஆப்கான் படைகள் சரணடைந்தன. ஆப்கான் ராணுவ வீரர்கள், தாலிபான்களுடன் இணைந்தும் கொண்டனர். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ஆப்கானை விட்டு தப்பி ஓடி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் தாலிபான்கள் எளிதாக முன்னேற முடிந்தது. இந்த நிலையில்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக 34 மாகாணங்களும் தாலிபான்கள் வசமாகிவிட்டன.

தப்பி ஓடிய அதிபர்
இதனையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டே தப்பி ஓடினார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேபோல் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் யார் என்பதை விரைவில் தாலிபான்கள் அறிவிக்கவும் உள்ளனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஆட்சிக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ரஷ்யாவோ பொறுத்திருந்து பார்த்து முடிவெடுப்போம் என கூறியுள்ளது.

உலகை பதற வைக்கும் காட்சிகள்
மேலும் தாலிபான்கள், இஸ்லாமிய கடும் போக்காளர்கள்; இஸ்லாமிய மதசட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவர்; இதனால் தங்களது உயிருக்கு ஆபத்து என கருதும் பல்லாயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் அந்த நாட்டைவிட்டு தப்பி ஓட காபூல் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். காபூல் விமான நிலையத்தில் இன்னமும் சில ஆயிரம் அமெரிக்கா படைகள் இருக்கின்றன. காபூல் விமான நிலையத்தில் காணும் வீடியோ காட்சிகள் உலகை அதிர்ச்சி அடைய வைத்து வருகின்றன. பறக்கும் விமானத்தில் தொங்கியபடி பயணித்து நடுவானில் இருந்து விழுந்து மாண்டவர்கள்.. சந்தை கடைவீதி போல அமெரிக்க ராணுவ விமானத்தில் கடுமையான நெரிசலுடன் நின்றபடி பயணிக்கும் ஆப்கானியர்கள்.. பல அடி உயர விமான நிலைய சுவர்களை ஏறி குதிக்க முயற்சிக்கும் ஆப்கானியர்கள்- அவர்கள் மீது துப்பாக்கிச் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு என்கிற காட்சிகள் உலகத்தை பதற வைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய தூதரகம் மூடல்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரகம் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதர் மற்றும் அனைத்து தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் இருந்து இந்தியர்கள், இந்திய தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் முழு வீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன. இதனிடையே 120 இந்தியர்களுடன் காபூலில் இருந்து புறப்பட்ட விமானப் படை விமானம், குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான படை தளத்தை வந்தடைந்தன. இந்த விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தாமல் ஈரான் சென்று அங்கிருந்து மாற்று வான்வழிப் பாதையை பயன்படுத்தி வருகின்றன. இதேபோல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்காக இ விசா முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications