Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாடுகளுக்கான சிறு பார்சல்கள் அனுப்புவது இன்று முதல் நிறுத்தம்! இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: ஜனவரி 1 ஆம் தேதி முதல், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சில பதிவு செய்யப்பட்ட பார்சல் சேவைகளை இந்தியா போஸ்ட் நிறுத்தியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அஞ்சல் துறை தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

சர்வதேச அஞ்சல் சங்கத்தின் புதிய விதிகளின்படி, சிறிய உறைகளில் வெளிநாடுகளுக்குப் பொருட்களை அனுப்பும் சிறு பார்சல் சேவை ஜனவரி 1 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இனி கடிதங்களையும் ஆவணங்களையும் மட்டுமே சிறிய உறைகள் வழியாக அனுப்ப முடியும்.

india post parcel

பார்வையற்றோருக்கான அஞ்சல் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பொருட்கள் அடங்கிய உறைகளைத் தரைவழி, கடல்வழி, அல்லது விமான அஞ்சல் சேவை மூலம் அனுப்பும் வசதி இனி இருக்காது.

முன்பிருந்த சேவைகளில் பார்சல்களைக் கண்காணிக்க முடியாததாலும், விநியோகத்தில் தாமதங்கள் ஏற்பட்டதாலும் அஞ்சல் துறை இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ஏற்றுமதிப் பொருட்கள் அல்லது சரக்குகளை ஐ.டி.பி.எஸ். (International Tracked Packet Service) என்ற கண்காணிப்பு சேவை மூலம் அனுப்பலாம்.

இந்தச் சேவை மூலம் பார்சல்களை அவை செல்லும் வழியெங்கும் கண்காணிக்க முடியும். சுங்க மற்றும் பாதுகாப்பு விதிகளை எளிதாக முடித்து, பார்சல்கள் விரைவாகச் சென்றடையவும் இது உதவும். மேலும், இந்த புதிய சேவை ஏற்றுமதியாளர்களுக்கும் இ-காமர்ஸ் விற்பனையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மாற்றம் குறித்து அஞ்சல் துறை ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய நடைமுறைக்கு மாற வாடிக்கையாளர்களுக்கு முழு உதவி வழங்கப்படும் என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவுக்கான தபால் பார்சல் சேவை நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க சுங்கத்துறை வெளியிட்ட புதிய, தெளிவற்ற அறிவிப்பே இந்த திடீர் முடிவுக்குக் காரணம். இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடும்பத்தினரும், இங்கிருந்து அவர்களுக்குப் பொருட்களை அனுப்பும் உறவினர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 50% வரி விதித்து பொருளாதார நிலையைச் சிக்கலாக்கி வந்த டிரம்ப் நிர்வாகம், 100 அமெரிக்க டாலருக்கும் (சுமார் ₹9,000) அதிகமான இந்தியப் பொருட்களுக்குச் சுங்க வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. ₹70,000 (800 டாலர்) வரையிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கும் ரத்து செய்யப்பட்டது. மேலும், அனைத்து தபால் பொருட்களுக்கும் மதிப்புக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்; 100 டாலர் வரம்புக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பின் தெளிவின்மை காரணமாக, அமெரிக்க விமானங்களில் இந்தியப் பார்சல்களை அனுமதிக்கக் கூடாது என அந்நாட்டுச் சுங்கத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய தபால் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பால், நாடு முழுவதும் அமெரிக்காவுக்கான பார்சல் சேவை கடந்த ஆகஸ்ட் முதல் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் உட்பட அஞ்சல் துறைக்குச் சொந்தமான 200 மையங்களில் இந்நிலை அமலுக்கு வந்தது.

தமிழகத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள உறவினர்களுக்கு மளிகை பொருட்கள், துணிமணிகள், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக 20 கிலோ எடையுள்ள பார்சல் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ₹17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண மற்றும் ஸ்பீட் போஸ்ட் என இரு பிரிவுகளில் பதிவு நடைபெறும்.

இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால், சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்குப் பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+