மக்களுக்கு நற்செய்தி.... இந்தியாவில் 8 மாதங்களில் 600 மில்லியன் கொரோனா டோஸ்கள்... அரசு முடிவு!
டெல்லி: இந்தியாவில் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 600 மில்லியன் கொரோனா டோஸ்கள் வழங்க உளளதாக தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர்களின் குழுவின் தலைவரான வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு இருக்கும் நிலையில் இதற்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் ஓரளவு பாதிப்பு குறைந்தாலும், மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி அந்த மருந்துகளை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 600 மில்லியன் கொரோனா டோஸ்கள் வழங்க முடிவு செய்துளளதாக தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர்களின் குழுவின் தலைவரான வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் இந்தியா முழுவதும் 600 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிகளை சேமித்து பாதுகாக்க 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் (36 முதல் 48 ° F) வரை வெப்பநிலையுடன் கூடிய குளிர்சாதன சேமிப்பு வசதிகளை அரசு ஏற்படுத்த உள்ளது. சீரம், பாரத், ஜைடஸ், மற்றும் ஸ்பூட்னிக் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு சாதாரண குளிர் சேமிப்பு நிலையே போதுமானது. ஆனால்,பைசரின் தடுப்பூசிக்கு சேமிப்பக நிலை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே தேவை. இதன் பிரத்யேகமான சேமிப்பு நிலைகள் உருவாக்கப்படும்.
பல்வேறு தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு இருக்கும் நிலையில் இதற்கு மருந்து கட்டுப்பட்டு வாரியம் "மிக விரைவில் ஒப்புதல் அளிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
தடுப்பூசியின் அரசு விலை நிர்ணயம் குறித்து முறையான பேசசுவார்த்தைகள் இன்னும் நடக்கவில்லை. தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து உறுதியான கொள்முதல் இன்னும் பிறப்பிக்கபடவில்லை என்கிறார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications