இந்தியாவில் ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 57,542
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,542 ஆகவும் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று காலை வரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 397 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் 53,720 பேர். இது 0.12 சதவீதமாகும்.

தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.69 சதவீதம். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 6,628 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,23,211 பேர். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தினசரி பாதிப்பு விகிதம் 6.78% வாராந்திர பாதிப்பு விகிதம் 4.49% இதுவரை மொத்தம் 92.38 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 1,58,625 சோதனைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,093 ஆக பதிவாகி உள்ளது. நேற்றைய கொரோனா பாதிப்பை ஒப்பிடுகையில் சற்று குறைவான எண்ணிக்கை. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,542 ஆகவும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications