இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,10,822; 4,090 பேர்ர் பலி மகாராஷ்டிராவில் தொடரும் மரண ஓலம்!
டெல்லி: இந்தியாவில் சனிக்கிழமையன்று மட்டும் 3,10,822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 4,090 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,31,62,057 ஆகும், உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 33,83,004. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,14,58,798..

4,090 பேர் மரணம்
இந்தியாவில் சனிக்கிழமையன்று மட்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,10,822, மேலு நேற்று 4,090 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 3,62,362.

கர்நாடகாவில் உச்சம்
இந்தியாவில் கர்நாடகாவில் ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் சனிக்கிழமையன்று மட்டும் 41, 554 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இம்மாநிலத்தில் 349 பேர் நேற்று மட்டும் கொரோனாவால் பலியாகினர்.

மகாராஷ்டிராவில் மரண ஓலம்
மகாராஷ்டிராவில் 34,848 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மேலும் மிக உச்சமாக 960 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் 303 பேர் பலி
தமிழகத்தில் சனிக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 33,658 ஆகவும் மரணங்கள் எண்ணிக்கை 303 ஆகவும் இருந்தது. உத்தரப்பிரதேசத்தில் சனிக்கிழமையன்று கொரோனாவுக்கு 281 பேர் பலியாகினர். அதேபோல் டெல்லியில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 337 பேர் பலியாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications