இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,26,123; 24 மணிநேரத்தில் 3,879 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா உலக நாடுகளிலேயே மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,26,123 ஆகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் 3,879 ஆகவும் உள்ளது.
உலக நாடுகளில் இந்தியா, பிரேசிலில்தான் கொரோனா இன்னமும் கோரத்தாண்டவமாடுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 16,25,20,846.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14,03,82,776. உலகில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,70,773. உலக அளவில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் 3,26,123 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் 3,26,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 3,879 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,43,72,243. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,66,229.

36,79,691 பேருக்கு சிகிச்சை
தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36,79,691. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,04,26,323. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது.

கர்நாடகாவில் அதி உச்சம்
ஆனால் நேற்று கர்நாடகாதான் ஒருநாள் பாதிப்பில் முதலிடத்தில் இருந்தது. கர்நாடகாவில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் 41,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் 39,923 பேருக்கும் தமிழ்நாட்டில் 31,892 பேருக்கும் நேற்று கொரோனா உறுதியானது.

இந்தியாவில் ஒருநாள் மரணங்கள்
மகாரஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 695 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதற்கு அடுத்ததாக கர்நாடகாவில் 373 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 311 பேரும் கொரோனாவால் மடிந்தனர். தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று கொரோனாவுக்கு 288 பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications