இந்தியாவில் 15,940 பேருக்கு புதியதாக கொரோனா; 20 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் நேற்று 17,336 புதிய கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 83,284 ஆக இருந்தது. இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 13.029 பேர் குணமடைந்திருந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,63,103 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 86.02 கோடி (86,02,58,139). வாராந்திரத் தொற்று 3.07 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 4.39 சதவீதமாக பதிவாகியுள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,940 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12.425 பேர். குணமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,61,481.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 91,779 ஆக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.21 சதவீதமாக உள்ளனர்.
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 196.94 கோடிக்கும் அதிகமான (1,96,94,40,932) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,54,91,739 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.61 கோடிக்கும் அதிகமான (3,62,20,781) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 193.53 கோடிக்கும் மேற்பட்ட (1,93,53,58,865) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 12.14 கோடிக்கும் மேற்பட்ட (12,14,44,440) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications