இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 8,000-த்தை கடந்து பதிவாகி உள்ளது- 4 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக 8,000- த்தை தாண்டி பதிவாகி உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணிநேர நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 40,370. அதாவது கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.09 சதவிதமாக இருந்தது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவீதம் ஆகவும் இருந்த்து.

இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 4,216 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். மேலும் 8,329 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 2.41 சதவீதம் ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 1.75 சதவீதம் ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக தொடர்ந்து 8,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 8,582 பேருக்கு புதியதாக தொற்று பதிவாகி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேர்த்தில் கொரோனாவால் மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 44,513.
Recommended Video
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,22,017 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,24,761.












Click it and Unblock the Notifications