தவறான ஆதிகால செயல்களை குப்பையில் வீச வேண்டும்.. முத்தலாக் மசோதா வெற்றி பற்றி மோடி டிவிட்!
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ஏற்றுக்கொள்ளப்படாத ஆதி கால செயல்களை குப்பையில் வீச வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்புக்கு இடையில் தற்போது முத்தலாக் தடை சட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் முத்தலாக் நடைமுறை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

எல்லோரும்
இந்த மசோதா வெற்றி அடைந்தது பாஜக கட்சியினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ராஜ்யசபாவில் போதிய பெரும்பான்மை இன்றியும் கூட மசோதாவை பாஜக வெற்றிகரமாக தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த 30 எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததால் மசோதா நிறைவேறி உள்ளது .
|
மோடி சந்தோசம்
இது குறித்து தற்போது பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். அதில், ஏற்றுக்கொள்ளப்படாத ஆதி கால செயல்களை குப்பையில் வீச வேண்டும். கடைசியில் அது நடந்துவிட்டது. இஸ்லாமிய பெண்களுக்கு வரலாற்று ரீதியாக செய்யப்பட்ட தவறுகளை தற்போது பாராளுமன்றம் சரி செய்துள்ளது. பாலின சமத்துவத்திற்கான வெற்றி இது. முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
|
நன்றி
மசோதாவிற்கு ஆதரவு அளித்த எல்லோருக்கும், அனைத்து கட்சி எம்பிக்களுக்கு நன்றி. இரண்டு அவையை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. இந்த முயற்சியும், வெற்றியும் எப்போதும் வரலாற்றில் நினைவு கூறப்படும்.
|
என்ன பெண்கள்
இந்த நிமிடத்தில் இந்த சட்டத்திற்காக போராடிய இஸ்லாமிய பெண்களுக்கும் நன்றி. தைரியமான இஸ்லாமிய பெண்கள் இதை எதிர்த்தனர். அவர்கள் இந்த தவறான முத்தலாக் முறை மூலம் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த சட்டம் அவர்களுக்கு சமஉரிமையை வழங்கி, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை உறுதிப்படுத்தும், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications