Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனா...இந்த ஆண்டு...

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு ஓராண்டு ஆகிறது. ஓராண்டிற்குள் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்தியா வந்த கேரளாவைனச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதல் முதலில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது நாடு முழுவதும் பரவுவதை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு, தொழிற்சாலைகள், பள்ளிகள், அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது.

 உயர்ந்தது எப்போது :

உயர்ந்தது எப்போது :

2020 ஏப்ரல் வரை இந்தியாவில் வெகு சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் மே மாதம் துவங்கி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயரத் துவங்கியது. கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது.

உச்சம் தொட்ட கொரோனா :

உச்சம் தொட்ட கொரோனா :

இந்த பாதிப்பானது செப்டம்பர் மாத மத்தியில் உச்சத்தை எட்டியது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பிக்குள்ளானது மக்களிடையே பீதியை அதிகரித்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கின.

7 மாதங்களில் குறைந்த கொரோனா :

7 மாதங்களில் குறைந்த கொரோனா :

ஆனால் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைய துவங்கியது. இம்மாத துவக்கத்தில் ஒரு நாளைக்கு 20,000 பேர் மட்டும் பாதிப்பு என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் நேற்று நாள் மேலும் குறைந்து 13,083 பேர் மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் குறைவு :

இந்தியாவில் குறைவு :

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைவு தான். இதுவரை இந்தியாவில் 1.7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,54,147 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அரசு புள்ளி விபர கணக்கு தெரிவிக்கிறது. இந்தியாவில் பலருக்கு இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து செலுத்தும் பணி :

தடுப்பு மருந்து செலுத்தும் பணி :

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16 ம் தேதி துவங்கப்பட்ட தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் 30 கோடி பேருக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+