கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனா...இந்த ஆண்டு...
டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு ஓராண்டு ஆகிறது. ஓராண்டிற்குள் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்தியா வந்த கேரளாவைனச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதல் முதலில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது நாடு முழுவதும் பரவுவதை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு, தொழிற்சாலைகள், பள்ளிகள், அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது.

உயர்ந்தது எப்போது :
2020 ஏப்ரல் வரை இந்தியாவில் வெகு சிலருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் மே மாதம் துவங்கி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயரத் துவங்கியது. கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது.

உச்சம் தொட்ட கொரோனா :
இந்த பாதிப்பானது செப்டம்பர் மாத மத்தியில் உச்சத்தை எட்டியது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பிக்குள்ளானது மக்களிடையே பீதியை அதிகரித்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கின.

7 மாதங்களில் குறைந்த கொரோனா :
ஆனால் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைய துவங்கியது. இம்மாத துவக்கத்தில் ஒரு நாளைக்கு 20,000 பேர் மட்டும் பாதிப்பு என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் நேற்று நாள் மேலும் குறைந்து 13,083 பேர் மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் குறைவு :
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைவு தான். இதுவரை இந்தியாவில் 1.7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,54,147 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அரசு புள்ளி விபர கணக்கு தெரிவிக்கிறது. இந்தியாவில் பலருக்கு இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து செலுத்தும் பணி :
உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16 ம் தேதி துவங்கப்பட்ட தடுப்பு மருந்து செலுத்தும் பணியில் 30 கோடி பேருக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications