இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-193 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. உலக அளவில் இங்கிலாந்தில் நேற்று 34,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

ரஷ்யாவில் நேற்று மட்டும் 962 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று 517 பேரும் மெக்சிகோவில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதிலும் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போடுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனாலும் கொரோனா பாதிப்பு தொடரவே செய்கிறது.

24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு பாதிப்பு

24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 193 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 10,691 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 85 பேர் கேரளாவில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 21,563 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நேற்று மட்டும் 46 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

நேற்று மட்டும் 46 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

நாட்டில் தற்போது கொரோனாவுக்கு 2,27,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 3,32,93,478 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,50,782 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 95,19,84,373 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் நாட்டில் 46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

ஒப்பீட்டளவில் குறைவு

ஒப்பீட்டளவில் குறைவு

கடந்த 7 மாதங்களை ஒப்பிடுகையில் வாராந்திர கொரோனா தொற்று பதிவு கணிசமாக குறைந்துள்ளது. முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு 12% குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மார்ச் முதல் வாரத்தில்தான் நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000க்கும் குறைவாக இருந்தது. தற்போது அந்த நிலைமைக்கு திரும்ப தொடங்கி இருக்கிறது. அதேபோல் கொரோனா மரணங்களும் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த மார்ச் 15-21 வாரத்தை ஒப்பிடுகையில் கொரோனா மரணங்கள் 4.5% குறைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+