இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- 24 மணிநேரத்தில் 28,903 பேருக்கு பாதிப்பு- 188 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 28, 903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 188 பேர் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12, 12,78,064. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 26,82,256. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் மீண்டவர்கள் எண்ணிக்கை 9,78,08,292.

இந்தியா 3-வது இடம்
உலக அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியா கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ளது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,09,601.

இந்தியாவில் புதிய பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 28, 903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,38,734 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து புதியதாக 17,741 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,45,284 ஆகும்.

கொரோனா மரணங்கள்
24 மணிநேரத்தில் 188 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,59,044 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதியதாக 17,864 பேருக்கும் கேரளாவில் 1,970; தமிழ்நாட்டில் 867 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications