நாடு முழுவதும்.. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,302 ஆக உயர்வு! 44 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 276 பேர் புதியதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,302 ஆகவும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 1,373 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 510, குஜராத்தில் 461, மேற்கு வங்கத்தில் 432 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் 457 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளை பொறுத்தவரை, டெல்லியில் 5 பேரும், கேரளாவில் 9 பேரும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத் மற்றும் டெல்லியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை அருணாச்சலப் பிரதேசம் மட்டும்தான் தொற்று பாதிப்பு ஒன்று கூட பதிவாகாத மாநிலமாக உள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு எண்ணிக்கை பார்த்தால், மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், 28 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 63 பேரும், டெல்லி மற்றும் குஜராத்தில் தலா 64 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் தற்போது 201 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவதால், கேரள அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவசர காலத்தில் சிகிச்சையளிப்பது குறித்து 'மாதிரி ஒத்திகைகளை' மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், இரத்தக் கசிவு போன்ற அறிகுறிகளை கண்காணிக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிக காய்ச்சல், உணவு உட்கொள்வதில் சிரமம், வலிப்பு மற்றும் சுவாச பிரச்சனை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்று பாதிப்பு அதிகரிப்பதாக தெரிந்தாலும், இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications