இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 412! 3 பேர் உயிரிழப்பு; கேரளாவில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் 3096
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 412 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700,304,277. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,960,191. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 671,511,719..
இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் மொத்தம் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்த 3 பேரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 53,3337. இந்தியாவில் மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44472153.
இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 412. இதில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 293. கொரோனாவால் உயிரிழந்தோர் 3 பேர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்கள் மொத்த எண்ணிக்கை 4170.
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்:
கேரளா- 3096
கர்நாடகா - 436
மகாராஷ்டிரா - 168
தமிழ்நாடு- 139
குஜராத் - 56
தெலுங்கானா -55
கோவா- 37
டெல்லி - 34
ஆந்திரா- 29
ராஜஸ்தான் - 27
புதுச்சேரி- 20
உ.பி- 16
மேற்கு வங்கம் 12
JN1 கொரோனா வைரஸ்: ஜே.என்.1 (JN1) வைரஸ் அதிகமான பாதிப்பு உள்ள மாநிலம் கர்நாடகா. இம்மாநிலத்தில் மொத்தம் 34 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் பெங்களூரில் மட்டும் 20 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் வேளாண் அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications