நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 45,892 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 44,291 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,07,09,557 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நாடு முழுவதும் 2,98,43,825 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 817 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,05,028 பேர் மரணமடைந்துள்ளனர் .
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 4,60,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,81,671 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,48,47,549 டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 40 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வந்த நிலையில் தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்றும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் புது புது பெயருடன் உருமாறி பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் விழிப்பணர்வுடன் இல்லாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்து மீண்டுமொரு பொது முடக்கத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications