இந்தியாவில் 15 நாட்களில் 2 மடங்காக அதிகரித்த கொரோனா மரணங்கள்- மகா., டெல்லிதான் காரணம்!
டெல்லி: மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்கள் கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை திடீரென மொத்தமாக அறிவித்த காரணத்தால் 15 நாட்களில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துவிட்டது.
நாட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது ஜூன் 3-ந் தேதியன்று மொத்தம் 5,815 ஆக இருந்தது. ஆனால் ஜூன் 17ல் இந்த எண்ணிக்கையானது 11,903 ஆக அதிகரித்தது. இதனால் உலக நாடுகளில் கொரோனா மரணங்களில் இந்தியா 8-வது இடம் என்ற நிலைக்கு போனது.

அத்துடன் இந்தியாவில் கொரோனா இறப்பு என்பது 2.9%-ல் இருந்து 3.4% ஆகவும் அதிகரித்தது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமான கொரோனா மரணங்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்தன.
ஜூன் 11-ந் தேதி முதல் 17 வரை மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் தமிழகம் ஆகிய மாநிலங்களின் நாள்தோறைய கொரோனா மரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவாகவே இருந்தன. ஆனால் புதன்கிழமையன்று மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 1409 என அறிவிக்கப்பட்டது. வழக்கமான மரண எண்ணிக்கையைவிட இது 8 மடங்கு அதிகம்.
பதிவாகதா மரணங்களை மொத்தமாக கணக்கிட்டு மகாராஷ்டிரா அரசு அறிவித்ததுதான் இதற்கு காரணமாகும். குறிப்பாக மும்பையில்தான் 1,000 மரணங்கள் இப்படி பதிவாகாமல் இருந்திருக்கின்றன. டெல்லியும் கூட ஜூன் 17- ந் தேதியன்று 439 கொரோனா மரணங்கள் அறிவித்தது. இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்களில் இது 22%. டெல்லி அரசும் பதிவு செய்யப்படாத கொரோனா மரணங்களை மொத்தமாக கணக்கிட்டு அறிவித்ததுதான் காரணமாகும்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா மரணங்களில் மகாராஷ்டிரா, டெல்லியின் பங்கு 62% ஆக உள்ளது. தமிழகத்தின் பங்கு 4.4%. ஆனால் கொரோனா மரணங்களில் குஜராத்தின் பங்களிப்பு 13% என கணக்கிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications