இந்தியாவில் 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,46,428 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியாவில்தான் உலக நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,46,428 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 1,136 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்திருக்கிறது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 77,512 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 37,80,108 ஆக அதிகரித்திருக்கிறது. தற்போதைய நிலையில் 9,86,598 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications