இந்தியாவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு- 52 லட்சத்தை தாண்டியது!
டெல்லி: உலக நாடுகளிலேயே இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சமாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 3,03,30,051 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,50,084 ஆகவும் அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,20,18,259.

ஒருநாள் பாதிப்பில் முதலிடம்
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில்தான் உலக நாடுகளிலேயே ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகம். அமெரிக்காவில் வியாழக்கிழமையன்று 42,241 பேருக்கும் 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 35,757 பேருக்கும் கொரோனா உறுதியானது. இந்தியாவில் ஒரேநாளில் 96,792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

52 லட்சத்தை தாண்டிய பாதிப்பு
இந்தியாவில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது. அதாவது 52,12,686 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரேநாளில் 87,778 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,09,828.

இந்தியாவில் ஒருநாளில் 1,175 பேர் மரணம்
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 1,175 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 84,404. இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் 24,617; கர்நாடகாவில் 9,366; ஆந்திராவில் 8,702 பேருக்கு வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒருநாள் பாதிப்பில் தமிழகம்
இந்தியாவில் ஒருநாள் பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 6,029 பேருக்கும் தமிழகத்தில் 5560 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒருநாள் கொரோனா மரணங்களிலும் தமிழகம் 5-வது இடத்துக்கு பின் தங்கியிருக்கிறது. மகாராஷ்டிராவில் 468; கர்நாடகாவில் 93; உத்தரப்பிரதேசத்தில் 81; ஆந்திராவில் 72 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்தனர்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications