கால்வன் பள்ளத்தாக்கு மோதலால் இந்தியா-சீனா உறவு சீர்குலைந்துள்ளது: ஜெய்சங்கர்
டெல்லி: லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலால் இந்தியா- சீனா உறவுகள் சீர்குலைந்து போயுள்ளது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆசியா சொசைட்டி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

1993 முதல் ஒப்பந்தங்கள்
1993-ம் ஆண்டு முதல் இந்தியா- சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இருநாடுகளிடையேயான எல்லை விவகாரங்களை எப்படி கையாள்வது, எல்லையில் ராணுவத்தினர் எப்படி நடந்து கொள்வது என பல்வேறு அம்சங்கள் இந்த ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ளன.

கால்வன் மோதலால் சீர்குலைவு
கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருதரப்பு உறவும் சீர்குலைந்துவிட்டது. எல்லையில் சீனா பெருமளவு ராணுவத்தை குவித்ததன் மூலமே பிரச்சனை உருவானது. சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் நிகழ்ந்தது.

பேச்சுவார்த்தைகள் என்ன?
இது பொதுமக்களிடமும் சரி அரசியல் தளத்திலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்புக்கும் இடையே ரகசியமானவை. இதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்படுவது என்பது சிக்கலானது.

எத்தனை காலத்துக்கு பேச்சுவார்த்தை?
இருநாடுகளின் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் ஒப்புக் கொள்ளக் கூடிய புள்ளி எது என்பதை கண்டறிவதும் சவாலானதுதான். தற்போதைய பேச்சுவார்த்தைகள் எத்தனை காலத்துக்கு நடைபெறும் என்பதையும் தெரிவிக்கவும் இயலாது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications