நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு பறந்த உத்தரவு! பயணிகள் கவனம்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த விமானப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது. விமான பயணிகள் இது குறித்து தெரிந்துக்கொள்வது முக்கியம்.
இந்தியாவின் பல நகரங்கள் மீது பாகிஸ்தான் வான் வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. எனவே இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய விமானப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரவின்படி, விமான பயணிகளுக்கான பரிசோதனை இரட்டிப்பாகப்பட்டிருக்கிறது. வழக்கமாக விமான பயணிகளுக்கு ஸ்கிரீனிங் என்கிற பரிசோதனை நடைபெறும். ஆனால் இந்த புதிய உத்தரவின்படி, இத்துடன் சேர்த்து இன்னொரு பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அதாவது பயணிகள் விமானத்தில் படிக்கட்டு வழியாகத்தான் ஏறுவார்கள். அங்கு வைத்து அவர்கள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதேபோல விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பயணிகளின் உறவினர்கள் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவிடுவது வழக்கம். ஆனல் இந்த உத்தரவையடுத்து இனி பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்களுக்கான நுழைவு மூடப்படும். அதேபோல, பாதுகாப்பு பணியில் ஏர் மார்ஷல் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்கள் பயணிகளை போல சாதாரண உடையில் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் ஆயுதம் இருக்கும். பயணிகளுக்கு நடுவே, சாதாரண பயணி போல இருந்து சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காண்பார்கள். இதன் மூலம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தடுக்கப்படும்.
எல்லையில் தற்போது பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மற்றம் ராஜஸ்தானின் பல நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை தொடங்கியிருந்தது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் துண்டிக்கபட்படிருக்கிறது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தானின் லாகூர் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications