மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறுவார்களா? மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும்?
டெல்லி: மாலத்தீவு நாட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் மொய்சு பகிரங்கமாக கெடு விதித்துள்ளார். மாலத்தீவு அதிபர் மொய்சு விதித்த மார்ச் 15-ந் தேதி கெடுவுக்குள் இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேறுமா? மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது.

மாலத்தீவு அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கோஷமும் இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை வெளியேற்றுவோம் என வாக்குறுதி தந்த மொய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அதிபரானது முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். அத்துடன் சீனாவுடன் மிக நெருக்கமான உறவையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மாலத்தீவின் அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்தனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த பின்னணியில் மாலத்தீவு நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவத்தினர் அனைவரையும் மார்ச் 15-ந் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என அந்நாட்டு அதிபர் மொய்சு கெடு விதித்துள்ளார். மாலத்தீவு நாட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புக்காக துருவ் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானம் ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியது. இவற்றை கையாள்வதற்காக ராணுவ வீரர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த ராணுவ வீரர்களைத்தான் உடனே வெளியேற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது மாலத்தீவு.
இருந்த போதும் இதுவரை மத்திய அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. மாலத்தீவுடனான உறவு விரிசலடைந்துவிட்ட நிலையில் ராணுவத்தினரை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு எத்தகைய முடிவை எடுக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மாலத்தீவில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களும் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications