அபிநந்தன் மீது தூசு பட்டாலும் தொலைந்தீர்கள்.. பாக்.கிற்கு இந்தியா கொடுத்த வார்னிங்
டெல்லி: உங்களுடன், பேச்சுவார்த்தை நடத்த முடியாது.. எங்கள் பைலட் அபிநந்தனுக்கு ஏதாவது நேர்ந்தால் தக்க பதிலடி தரப்படும்.. என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை செய்தியை இன்று, அனுப்பியிருந்தது.
பாகிஸ்தானின் போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இந்திய பைலட் அபிநந்தன் கைதியாக சிக்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின், காந்தகாரில் இந்திய விமானத்தை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு, இந்திய சிறைகளில் இருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கு பேரம் பேசியது போல, அபிநந்தனை, பயன்படுத்தி இந்தியாவின் படைகளை ஜம்மு காஷ்மீரில் இருந்து பின்வாங்க செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்து வந்தனர்.
ஆனால் இந்தியா ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தது. இம்முறை எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும், பேரத்திற்கும், தயார் இல்லை என்பதுதான் அது. இஸ்ரேல் பாணியில்தான், இதுபோன்ற பேரங்களை எதிர்கொள்ள இந்தியா தயாரானது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த பதட்ட நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று இந்தியாவிற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தி மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக இருந்தது. அதில், "இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. அதே நேரம் உங்கள் பிடியில் உள்ள எங்களது விமானிக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படக்கூடாது. எங்களது பைலட்டுக்கு ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எங்கள் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும். எனவே எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இன்றி அபிநந்தனை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒரு செய்தி குறிப்பு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக டெல்லியில் இருந்து வந்த செய்திகள் நமக்கு தெரிவித்தன.
இந்த செய்தி மீடியாக்களில் வெளியான அடுத்த 1 மணி நேரத்திற்குள், அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications