உன்னிப்பாக கவனிக்கிறோம்.. இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.. மத்திய அரசு உறுதி!
டெல்லி: இலங்கையின் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சூழலை கடக்க முயற்சிக்கும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இந்த நிலையில் பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் மாளிகை முற்றுகை
நேற்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகையிலிருந்து தப்பிச் சென்றார்.

பிரதமர் வீட்டுக்கு தீ
பின்னர் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக மாளிகையை சூறையாடினர். தொடர்ந்து பழைய நாடாளுமன்ற வளாகத்தையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து இரவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் போராட்டம் உச்சத்தை எட்டியது.

தொடரும் குழப்பம்
இதனிடையே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, வரும் 13ஆம் தேதி பதவி விலக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் ராஜினாமா செய்தார். இதனால் 30 நாட்கள் சபாநாயகர் அதிபராக பதவி வகிப்பார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள போராட்டங்களால் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனை முடிவு செய்வதற்காக அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா துணை நிற்கும்
இந்த நிலையில், அண்டை நாடான இலங்கையுடன் இந்தியா ஆழமான நாகரீக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மக்கள் எதிர்கொண்டு வரும் பல சவால்களை நாங்கள் அறிவோம். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுக்கு நாங்கள் நிற்போம்.

மத்திய அரசு உறுதி
இலங்கையின் கடுமையான பொருளாதார நிலைமையை சரி செய்வதற்காக இந்தியா இந்த ஆண்டு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இலங்கையின் அண்மைக்கால சூழல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications