கால்வன் மோதலுக்குப் பின் தென்சீனா கடற்பரப்பில் இந்திய போர்க்கப்பல்.. சீனாவுக்கு அதிரடி செக்
டெல்லி: லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் தற்போது தென் சீனா கடற்பரப்பில் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் இந்திய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
லடாக்கின் கிழக்கின் கால்வன் பள்ளத்தாக்கை உரிமை கோரியது சீனா. இதனைத் தொடர்ந்து அதை சீனா ஆக்கிரமிக்க முயன்றதால் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்தியா- சீனா பதற்றம்
இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவுக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியா- சீனா இடையே பெரும் யுத்த பதற்றம் ஏற்பட்டது.

தென் சீனா கடற்பரப்பில் போர்க்கப்பல்கள்
இதனிடையே கடந்த ஜூலை மாதம் இந்திய போர்க்கப்பல் ஒன்று தென் சீனா கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்சீனா கடற்பரப்பு முழுவதையும் தமக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது சீனா.

தென்சீனா கடற்பரப்பில் இந்தியா, அமெரிக்கா
ஆனால் தென்சீனா கடற்பரப்பை ஒட்டிய வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உரிமையானது என்கின்றன. இதனால் தென்சீனா கடற்பரப்பு எப்போதும் பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. சீனாவுக்கு எதிராக பிற நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் ஒருமுனையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மலாக்கா ஜலசந்தியிலும்...
இன்னொரு முனையில் இந்திய போர்க்கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்குள் சீனாவின் கப்பல்கள் நுழையும் மலாக்கா ஜலசந்தியில் ஏற்கனவே இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications