ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்
டெல்லி: அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் மேகங்கள் வளைகுடா பிராந்தியத்தைச் சூழ்ந்துள்ள நிலையில், அங்குச் சிக்கித் தவிக்கும் 18 இந்தியக் கப்பல்களை மீட்க இந்தியக் கடற்படை இப்போது ஒரு பிரம்மாண்ட மீட்பு ஆபரேஷனில இறங்கியுள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியத் துறைமுகங்களில் தேங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான டன் சரக்குகளைச் சீரமைக்கவும் மத்திய அரசு இந்த ஆபரேஷனை ஆரம்பித்துள்ளது.
வளைகுடாவில் மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், ஹார்முஸ் பஞ்சாயத்து முடிந்தபாடில்லை. ஒரு பக்கம் ஈரான் அதில் கப்பல்களை விட மாட்டோம் எனச் சொல்லும் நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவும் ஹார்முஸை முடக்குவோம் என மிரட்டியுள்ளது. இதனால் அங்கு பெரும் குழப்பமே நிலவுகிறது.

இந்தியக் கப்பல்கள்
இதற்கிடையே அங்கு சுமார் 18 இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன. யுத்தம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள அந்தக் கப்பல்கள் இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு மிக முக்கியமானவை. 11 கச்சா எண்ணெய் டாங்கர்கள், 4 எல்பிஜி (LPG) கேரியர்கள் மற்றும் 3 எல்என்ஜி (LNG) கப்பல்கள் ஆகியவை அங்குச் சிக்கியுள்ளன.
இந்திய கடற்படை
இவற்றில் 5 கப்பல்கள் இந்திய நாட்டில் பதிவு செய்யப்பட்டவை.. மற்றவை இந்திய நிறுவனங்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டவை. அங்குச் சிக்கித் தவிக்கும் 18 இந்தியக் கப்பல்களை மீட்க இந்தியக் கடற்படை இப்போது ஒரு பிரம்மாண்ட மீட்பு ஆபரேஷனில இறங்கியுள்ளது. இதில் எல்பிஜி கப்பலான கிரீன் ஆஷா (Green Asha) ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பையின் ஜேஎன்பிடி துறைமுகத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இது மற்ற கப்பல்களுக்கும் ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால், இந்தியத் துறைமுகங்களில் இதுவரை இல்லாத அளவுக்குச் சரக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சுமார் 1,06,890 TEU அளவிலான கன்டெய்னர்கள் துறைமுகங்களிலேயே முடங்கியுள்ளன. குறிப்பாக, அழுகக்கூடிய நிலையில் உள்ள உணவுப் பொருட்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால், நிலைமை சீராகும் வரை வளைகுடா நாடுகளுக்குப் புதிய சரக்கு ஏற்றுமதியைத் துறைமுகங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும், கப்பல் நிறுவனங்களுக்குத் துறைமுகக் கட்டணத்தில் சலுகை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலுமிகள்
சரக்குக் கப்பல்கள் ஒருபுறம் என்றால், போர் தொடங்கிய போது பாரசீக வளைகுடா பகுதியில் சுமார் 20,000 இந்தியக் கப்பல் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதுதான் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 475 பேர் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களில் பணிபுரிபவர்கள். இதுவரை மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து 1,754 மாலுமிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
சர்வதேச கடல்சார் அமைப்பு, தற்போது நிலவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஒரு 'பாதுகாப்பான பாதையை' (Evacuation Corridors) உருவாக்கித் தருமாறு சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் முடங்கிக் கிடக்கும் சர்வதேச வர்த்தகம் மீண்டும் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
டிரம்பை போலவே .. விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய பிரிட்டன்.. இந்தியாவுக்கு தான் மிக பெரிய சிக்கல் -
5 மணி நேரம் ரூம் ரூமாக ஓடிய அதிகாரிகள்.. அமெரிக்க தலைவர்களின் ரூமிற்கே வர மறுத்த ஈரான்! பரபர தகவல் -
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே -
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
வளைகுடாவில் மூக்கை நுழைக்கும் ஷெரீப்.. சவுதி பாகிஸ்தான் டீல் என்ன! உலக போர் வெடிக்கும் ஆபத்து -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்














Click it and Unblock the Notifications