வங்க கடலில் இந்தியா ஏவுகணை சோதனை.. இந்திய பெருங்கடலில் ஊடுருவிய சீனா உளவு கப்பல்- பகீர் பதற்றம்!
டெல்லி: வங்காள விரிகுடா கடலில் இந்தியா ஏவுகணை சோதனை நடத்தும் நிலையில் இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல் ஊடுருவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல்கள் நடமாட்டம் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் அனுமதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இலங்கையில் சீன உளவு கப்பல்
இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அதிநவீன சீன உளவு கப்பல், தென்னிந்தியாவில் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு நிலைகளை எளிதில் கண்காணிக்கும் ராடார்களை கொண்டிருந்தது. இதனால் இந்தியா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பலை இலங்கை அனுமதித்தது. இதனால் இலங்கை மீது இந்தியா கடும் அதிருப்தியை காட்டியது.

ஏவுகணை சோதனை
இந்த பின்னணியில் மேலும் ஒரு உளவு கப்பலை இந்திய பெருங்கடல் பகுதிக்கு சீனா அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. வங்காள விரிகுடாவில் வீலர்ஸ் தீவில் நமது நாடு பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட ஏடி-1 ஏவுகணையும் இத்தீவில் இருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையமான டிஆர்டிஓவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டும் தெரிவித்திருந்தார். அதேபோல் அடுத்த வாரம் மற்றொரு ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளது. இது நவம்பர் 10 அல்லது 11-ந் தேதியன்று நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

மீண்டும் சீன உளவு கப்பல்
இந்த ஏவுகணை சோதனைகளின் போது இந்திய பெருங்கடலில் சீனாவின் மற்றொரு உளவு கப்பல் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலை இந்திய கடற்படை படுதீவிரமாக கண்காணித்தும் வருகிறது. அது எந்த பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏவுகணை சோதனை கண்காணிப்பு?
இது தொடர்பாக National Maritime Foundation இயக்குநர் ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் பிரதீப் சவுகான் கூறியதாவது: இந்தியா ஏவுகணை சோதனை நடத்தும் நேரத்தில் சீன உளவு கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏவுகணை சோதனை எப்படி நடக்கிறது? அதன் பல்வேறு பரிமாணங்கள் என்ன? என்பது குறித்து கண்காணிக்கவே இந்த கப்பல் வந்திருக்கலாம் என்றார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications