Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திக்திக்.. கடத்தல் கப்பலை நெருங்கிய ஐஎன்எஸ் சென்னை! கடற்கொள்ளையர்களுக்கு சென்ற வார்னிங் - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சோமாலியா அருகே 15 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். கடத்தப்பட்ட அந்த கப்பல் இருக்கும் இடத்தை இந்திய கப்பற்படையின் ஐஎன்எஸ் சென்னை விரட்டி சென்று நெருங்கி உள்ள நிலையில் விரைவில் மீட்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் இந்திய கப்பற்படை சார்பில் கடற்கொள்ளையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோமாலியா கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்கிறது. கடற்கொள்ளையர்களின் அச்சத்துக்கு நடுவே தான் தற்போது வரை சரக்கு கப்பல்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக கடற்கொள்ளையர்கள் நடமாடும் பகுதியில் செல்லும்போது கடற்கொள்ளையர்கள் கப்பலில் நுழைவதை தடுக்கும் வகையில் முள்வேலிகள் சுற்றப்பட்டு இருக்கும்.

Indian Navy warship INS Chennai has reached the coast of Somalia to rescue a Cargo vessel which was hijacked by pirates

இருப்பினும் அத்தகைய தடுப்பு வேலிகளையும் தகர்த்து கடற்கொள்ளையர்கள் கப்பல்களை கடத்தி செல்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சோமாலியா கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பல் ஒன்றை கடத்தி சென்றுள்ளனர்.

லிபேரியா நாட்டு கொடியுடன் எம்பி லிலா நோர்போக் என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் பிரேசில் நாட்டின் டுஅகோ துறைமுகத்தில் இருந்து பஹ்ரைனின் கலிபா பின் சல்மான் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு கப்பலில் இந்தியாவை சேர்ந்த 15 மாலுமிகள் பணியில் இருந்தனர். இந்த சரக்கு கப்பல் சோமாலியாவுக்கு கிழக்கே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று அந்த கப்பலுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து கப்பல் கேப்டன் சார்பில் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் அந்த பகுதியை நோக்கி திருப்பி விடப்பட்டது. மேலும் இந்திய கப்பற்படையின் ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்தன.

இதற்கிடையே தான் அந்த சரக்கு கப்பலில் நுழைந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என்பதும், அவர்கள் கப்பலில் இருந்து மாலுமிகள் உள்பட பணியாளர்களை சிறைபிடித்து அந்த கப்பலை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இந்நிலையில் தான் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்கும் வகையில் கடற்கொள்ளையர்களை நெருங்கி உள்ளது.

தற்போது சோமலியா கடல் பகுதியில் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் சென்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது வரை கப்பலில் உள்ள இந்தியாவின் 15 மாலுமிகள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடத்தப்பட்ட கப்பலை மீட்புக்கான நடவடிக்கை என்பது தொடங்கி உள்ளது.

அதன்படி கப்பற்படை கப்பலில் இருக்கும் வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பயணித்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது கடத்தப்பட்ட கப்பலை விட்டுவிட்டு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் கப்பல் மீட்புக்கான ஆபரேஷனை தொடங்குவோம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+