Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக மாறப்போகுது வந்தே பாரத் ரயில்.. இனி ஈசியாக டிக்கெட் கிடைக்கும்.. ரயில்வேயின் மாஸ் பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் பயணிகளின் ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் ரயில்வே இனிப்பான பிளானை கையில் எடுத்துள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்துவது ரயில் சேவையைத்தான். இதனால், பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலை கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது.

Indian Railway is planning to introduce longer Vande Bharat trains with up to 20 coaches

வந்தே பாரத் ரயில்: இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேரு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பயணிகள் ஆதங்கம்: இந்த ரயில்களை தொலை தூரங்களுக்கு இயக்க ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை 8 பெட்டிகள் முதல் 16 பெட்டிகள் வரை கொண்டதாக இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் பல வழித்தடங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பது இல்லை என்று பயணிகள் ஆதங்கப்படுவதை காண முடிகிறது.

20 ஆக உயர்த்தப்படும்: இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். எப்போதும் பிசியாக இருக்கும் ரூட்டில் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. தொலைதூரங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

டிக்கெட் எளிதில் கிடைக்கும்: வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதன் மூலம் ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் என்பதோடு பயணிகளுக்கும் டிக்கெட் கிடைப்பதில் இருக்கும் சிரமம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வந்தேபாரத் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பதால் பிற ரயில் சேவை பாதிக்கப்படலாம் என்று பயணிகள் முன்வைக்கும் காரணமாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+