மொத்தமாக மாறப்போகுது வந்தே பாரத் ரயில்.. இனி ஈசியாக டிக்கெட் கிடைக்கும்.. ரயில்வேயின் மாஸ் பிளான்
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் பயணிகளின் ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் ரயில்வே இனிப்பான பிளானை கையில் எடுத்துள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்துவது ரயில் சேவையைத்தான். இதனால், பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலை கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது.

வந்தே பாரத் ரயில்: இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேரு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பயணிகள் ஆதங்கம்: இந்த ரயில்களை தொலை தூரங்களுக்கு இயக்க ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை 8 பெட்டிகள் முதல் 16 பெட்டிகள் வரை கொண்டதாக இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் பல வழித்தடங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பது இல்லை என்று பயணிகள் ஆதங்கப்படுவதை காண முடிகிறது.
20 ஆக உயர்த்தப்படும்: இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். எப்போதும் பிசியாக இருக்கும் ரூட்டில் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. தொலைதூரங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
டிக்கெட் எளிதில் கிடைக்கும்: வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதன் மூலம் ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் என்பதோடு பயணிகளுக்கும் டிக்கெட் கிடைப்பதில் இருக்கும் சிரமம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வந்தேபாரத் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பதால் பிற ரயில் சேவை பாதிக்கப்படலாம் என்று பயணிகள் முன்வைக்கும் காரணமாக சொல்லப்படுகிறது.
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications