Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியர்களுக்கு எமனாகும் இதய நோய்! மற்ற நாடுகளை விட 10 ஆண்டுக்கு முன்பாகவே வரும் மரணம்! ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீப காலமாக இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மேற்கத்திய நாட்டினரை விட இந்தியர்கள் இதய நோயால் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிடுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கின்றனர்.

நவீன உலகில் மனிதர்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இதய நோய்கள்தான் இருக்கின்றன. குறிப்பாக கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கரோனரி இதய நோய் (CHD), பக்கவாதம், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்த இதய நோய், புற தமனி நோய் (PAD), பெருநாடி பெருந்தமனி தடிப்பு ஆகியவை 'சிவிடி' என்று குறிப்பிடப்படுகிறது.

Indians heart disease

இந்த 'சிவிடி' பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்கிறார்கள். இந்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 70 வயதிற்குட்பட்டவர்களில் நிகழ்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், சிவிடி பாதிப்பு உயிரிழப்புகளில் இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பதுதான்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 20%க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் ஏறத்தாழ 17% பெண்கள் இந்த சிவிடி பாதிப்பால் உயிரிழக்கின்றனர். மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் 20-50% சிவிடி பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் 'சிவிடி' பாதிப்பு உயிரிழப்பானது இந்தியாவில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்கு பல காரணங்களை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும்

“நோயறிதல் என்பது தாமதமாக இருப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். நெஞ்சு வலி என்பது பலரும் சாதாரண ஒன்றாக நினைத்துக்கொள்கிறார்கள். இது குறித்து பரிசோதனை செய்து பார்த்தால்தான் அது சாதாரண வலியா? இதயம் தொடர்பான நோயின் அறிகுறியாக என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்தியாவில் பெண்களுக்கு இதய நோய் குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கிறது.

எனவே அவர்களால், இதய நோய் தொடர்பான அறிகுறிகளை சரியாக கணிக்க முடியாமல் போய்விடுகிறது. பல நேரங்களில் வித்தியாசமான அறிகுறிகள் தோன்றுகின்றன. எனவே மரணம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதய நோய்களுக்கு அடிப்படையாக மூன்று காரணங்களை சொல்லலாம்.

ஒன்று மரபணு ரீதியான பாதிப்பு. இரண்டாவது உடலில் சேர்ந்திருக்கும் முறையற்ற உணவு பழக்கம் மூலம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பு, மூன்றாவது உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை, உடல் செயல்பாடுகள் இல்லாதது, போதிய உடற்பயிற்சி இல்லாதது என மூன்று காரணங்கள்தான் இதய பிரச்னைக்கு முக்கியமானதாக இருக்கிறது. வழக்கமான இந்த காரணிகளை விட புகை பிடித்தல், அளவுக்கு அதிகமான மது, போதை பழக்கம் போன்றவையும் இதய பிரச்னைக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

இவற்றை தடுக்க, சீரான உடற்பயிற்சி, உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்றவை தேவைப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் அவசியம்” என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+