Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவுக்கு ஷாக்! இந்தியாவின் அஸ்த்ரா 2 ஏவுகணையால் ஜர்க் ஆகும் டிராகன்! அடி சறுக்குதா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிரி நாட்டு விமானங்களை நீண்ட தொலைவில் வைத்தே தாக்கி அழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் அஸ்த்ரா ஏவுகணைகள். அஸ்த்ரா மார்க்-1 ஏவுகணைகள் 80-110 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை தாக்கி அழிக்கக்கூடியது. இதனை தொடர்ந்து தற்போது உருவாக்கப்பட்டு வரும் அஸ்த்ரா மார்க்-2 ஏவுகணைகள் சீனாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் பயன்படுத்தியது சீன ஏவுகணைகளைதான்.

DRDO Indian Air Force china

அட்வான்டேஜஸ்

PL-15 என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, பஞ்சாப் பகுதியில் வெடிக்காத நிலையில் இந்திய ராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டது. உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணையிலிருந்து போர் விமானங்களால் தப்பிக்கவே முடியாது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில், அதாவது, மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் இது பறக்கும். சீன தயாரிப்பான இது 200-300 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை தாக்கும் என்றாலும், பாகிஸ்தானுக்கு சீனா விற்ற இந்த ஏவுகணைகள் 145 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை மட்டுமே தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

துல்லியமான தாக்குதல்

இதில் AESA எனும் அதிநவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. எதிரிநாட்டு ரேடார் சமிக்ஞைகளை தடுத்து, இலக்கை துல்லியமாக தாக்கும். கண்களுக்கு தெரியாத தூரத்தில் இருக்கும் இலக்குகளையும் இது தாக்கும்.

தப்பிக்கவே முடியாது

முக்கியமான விஷயம், இந்த ஏவுகணையின் என்ஜின்தான். டபுள் பல்ஸ் மோட்டார் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த ஏவுகணையின் பலம். பாதி தூரம் சென்ற பின்னர், இரண்டாவது மோட்டார் இயங்கும். இது ஏவுகணைக்கு அசாத்திய வேகத்தை கொடுக்கிறது. எனவே போர் விமானங்கள் எவ்வளவு வேகமாக திரும்பினாலும் இந்த ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. போர் விமானங்கள் மட்டுமல்லாது எதிரிகளின் ராணுவ இலக்கை தாக்கவும் இது பயன்படுகிறது.

டெக்னாலஜி

இதில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜி இதுவரை நமக்கு தெரியாமல் இருந்த நிலையில், பஞ்சாபில் விழுந்த ஏவுகணையை DRDO ராணுவ அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். சோதனையில் சீனாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் தெரிய வந்திருக்கிறது. இந்த ரகசியங்களை தெரிந்துக்கொண்ட இந்திய ராணுவம் தற்போது மேம்பட்ட அஸ்தரா மார்க் 2 ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் தயாரிப்பு

இது 120-160 கி.மீ தொலைவில் உள்ள போர் விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும். இதிலும் தற்போது டபுள் பல்ஸ் மோட்டாரும், AESA கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. சீன தொழில்நுட்பத்தை வைத்து, அந்நாட்டுக்கே சவால் விடும் வகையில் தற்போது இந்தியா இந்த ஏவுகணையை உருவாக்கியிருக்கிறது. விரைவில் இதன் சோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+