சீனாவுக்கு ஷாக்! இந்தியாவின் அஸ்த்ரா 2 ஏவுகணையால் ஜர்க் ஆகும் டிராகன்! அடி சறுக்குதா!
டெல்லி: எதிரி நாட்டு விமானங்களை நீண்ட தொலைவில் வைத்தே தாக்கி அழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் அஸ்த்ரா ஏவுகணைகள். அஸ்த்ரா மார்க்-1 ஏவுகணைகள் 80-110 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை தாக்கி அழிக்கக்கூடியது. இதனை தொடர்ந்து தற்போது உருவாக்கப்பட்டு வரும் அஸ்த்ரா மார்க்-2 ஏவுகணைகள் சீனாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் பயன்படுத்தியது சீன ஏவுகணைகளைதான்.

அட்வான்டேஜஸ்
PL-15 என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, பஞ்சாப் பகுதியில் வெடிக்காத நிலையில் இந்திய ராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டது. உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணையிலிருந்து போர் விமானங்களால் தப்பிக்கவே முடியாது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில், அதாவது, மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் இது பறக்கும். சீன தயாரிப்பான இது 200-300 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை தாக்கும் என்றாலும், பாகிஸ்தானுக்கு சீனா விற்ற இந்த ஏவுகணைகள் 145 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை மட்டுமே தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
துல்லியமான தாக்குதல்
இதில் AESA எனும் அதிநவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. எதிரிநாட்டு ரேடார் சமிக்ஞைகளை தடுத்து, இலக்கை துல்லியமாக தாக்கும். கண்களுக்கு தெரியாத தூரத்தில் இருக்கும் இலக்குகளையும் இது தாக்கும்.
தப்பிக்கவே முடியாது
முக்கியமான விஷயம், இந்த ஏவுகணையின் என்ஜின்தான். டபுள் பல்ஸ் மோட்டார் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த ஏவுகணையின் பலம். பாதி தூரம் சென்ற பின்னர், இரண்டாவது மோட்டார் இயங்கும். இது ஏவுகணைக்கு அசாத்திய வேகத்தை கொடுக்கிறது. எனவே போர் விமானங்கள் எவ்வளவு வேகமாக திரும்பினாலும் இந்த ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. போர் விமானங்கள் மட்டுமல்லாது எதிரிகளின் ராணுவ இலக்கை தாக்கவும் இது பயன்படுகிறது.
டெக்னாலஜி
இதில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜி இதுவரை நமக்கு தெரியாமல் இருந்த நிலையில், பஞ்சாபில் விழுந்த ஏவுகணையை DRDO ராணுவ அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். சோதனையில் சீனாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் தெரிய வந்திருக்கிறது. இந்த ரகசியங்களை தெரிந்துக்கொண்ட இந்திய ராணுவம் தற்போது மேம்பட்ட அஸ்தரா மார்க் 2 ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் தயாரிப்பு
இது 120-160 கி.மீ தொலைவில் உள்ள போர் விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும். இதிலும் தற்போது டபுள் பல்ஸ் மோட்டாரும், AESA கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. சீன தொழில்நுட்பத்தை வைத்து, அந்நாட்டுக்கே சவால் விடும் வகையில் தற்போது இந்தியா இந்த ஏவுகணையை உருவாக்கியிருக்கிறது. விரைவில் இதன் சோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications