தீவிரவாத தாக்குதல்.. இனி போராக கருதப்படும்! கேட்டுச்சா? பாகிஸ்தானுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் உரசல்கள் போராக வெடிக்க இருந்த நிலையில், இந்தியா முக்கியமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இனி இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அது போராக கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் முக்கியமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

pakistan india Pakistan

இந்த ஆபரேஷனை தங்களுக்கு எதிரானதாக கருதிக்கொண்டு இந்தியா மீது பாகிஸ்தான் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். அதேபோல ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலும் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இருப்பினும் ஏவுகணைகளை கொண்டு பாக். தாக்குதலை நடத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இந்திய எல்லையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் அதிரடியில் இறங்கியது. பாகிஸ்தானின் ராணுவ விமான தளங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டின் ராணுவ நிலை தகர்க்கப்பட்டது. அதே நேரம் அந்நாடு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இப்படி இந்தியா கொடுத்த ஒவ்வொரு அடியும் இடிபோல பாகிஸ்தானை தாக்கியது.

இதே நிலை நீடித்தால் அடுத்த ஓரிரு நாட்களில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் முற்றிலுமாக அழித்திருக்கும். இருப்பினும் இரண்டும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நாடுகளாகும். எனவே பொறுப்பை உணர்ந்து இந்தியா சமாதானத்திற்கு வந்திருக்கிறது. அதாவது இனி இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அது போராக கருதப்படும் என்றும், போருக்கு கொடுக்கும் பதிலடியை தீவிரவாத தாக்குதலுக்கு கொடுப்போம் என்றும் மத்திய அரசு நிலைபாடு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பாகிஸ்தானுக்கு சாத்தியமில்லாத விஷயம். தீவிரவாதிகளின் ஊற்று அங்குதான் இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களும் பாகிஸ்தானில்தான் திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கு பயிற்சி பெற்றவர்கள்தான் இந்தியாவில் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். எனவே இனியும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் முயன்றால் அந்நாட்டுக்கு இந்தியா இப்போது கொடுத்த பதிலடிதான் நினைவுக்கு வரும்.

இதை கவனத்தில் கொண்டு அந்நாடு தீவிரவாதத்தை ஆதரிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+