லாக்டவுனால் 78,000 உயிரிழப்புகள் தவிர்ப்புன்னீங்களே.. அறிவியல் ஆதாரம் கொடுங்க.. காங். கிடுக்கிப்பிடி
டெல்லி: எதன் அடிப்படையில் நாட்டில் பொது முடக்கம் காரணமாக 14 முதல் 29 லட்சம் வரையிலான கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது, 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் கொரோனா தாக்கம் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து விவாதம் மேற்கொள்ள ராஜ்ய சபாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர் மனோஜ் ஜா ''ஜீரோ அவர்'' நோட்டீஸ் அளித்து இருந்தார். (ஜீரோ அவர் என்பது சபை கூடுவதற்கு முன்பு உறுப்பினர்கள் கேட்க விரும்பும் கேள்வியை காலை பத்து மணிக்குள் சபாநாயகரிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும்)

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ''நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது, கொரோனாவுக்கான யுத்தம் இன்னும் நீண்ட தொலைவில் இருக்கிறது. தடுப்பதற்கான அனைத்து போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்பதை அவைக்கு தெரிவிக்கிறேன்.
நாட்டில் பொது முடக்கம் காரணமாக 14 முதல் 29 லட்சம் வரையிலான கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது, 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு இருக்கிறது'' என்றார்.
எதன் அடிப்படையில் அமைச்சர் இந்த தகவலை அவையில் தெரிவித்துள்ளார். அதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இருக்கிறதா என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார். அப்போது, ''மத்திய அரசின் இந்த முடிவுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை இந்த அவைக்கு அமைச்சர் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications