சைப்ரஸ் நாட்டுக்கு ஹவாலா பணம் அனுப்பிய சித்தார்த்தா? உதவிய காங். பிரமுகர்கள்.. ஐடி ரெய்டால் அம்பலம்
Recommended Video
டெல்லி: கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்ததாக, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின், மருமகனும், கஃபே காஃபி டே என்ற பிரபல சங்கிலித் தொடர் ரெஸ்டாரண்ட் நிறுவனருமான சித்தார்த்தா நேற்று முதல் திடீரென மாயமான நிலையில், அவரது உடல் மங்களூர் அருகே உள்ள நேத்ராவதி அணையில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

இவரது மரணத்தின் பின்னணி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் 'டைம்ஸ் நவ்' ஆங்கில ஊடகம், சித்தார்த்தா நிறுவனத்தில் வருமானவரித்துறை சார்பில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக செய்தி வெளியிட்டு வருகிறது.
அந்த செய்தியில் கூறியிருப்பது இதுதான்: சிங்கப்பூரில் உள்ள இடைத்தரகர் ஒருவர் மூலமாக, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக சித்தார்த்தா பணம் அனுப்பி பதுக்கி வைத்துள்ளார்.
ரஜ்னிஷ் கோபிநாத் என்ற சிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் தான் சைப்ரஸ் உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்ய வசதியாக உள்ள நாடுகளுக்கு இந்த பணத்தை அனுப்பி வைக்க உதவி செய்துள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் டிகே சிவகுமாரின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இது தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்தன. சிவகுமார் உள்ளிட்ட மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் சித்தார்த்துக்கு உதவி செய்துள்ளனர். இவ்வாறு வருமான வரித்துறையினர் சேகரித்த ஆவணத்தில் இருப்பதாக, டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா இரு வருடங்கள் முன்பாக, பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications