லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முதல்முறையாக களம் இறங்கும் ஆளில்லா விமானங்கள்!
டெல்லி: லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முதல்முறையாக ஆளில்லா விமானங்கள், விமானங்கள் ராஜஸ்தானில் களம் இறங்குகின்றன.
Recommended Video
லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானிலிருந்து பயணம் செய்து இந்தியாவுக்கு நுழைந்துவிட்டது. தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தியது.
இதையடுத்து மகாராஷ்டிராவில் கிழக்கு பகுதியில் உள்ள 4 முதல் 5 கிராமங்களில் படையெடுத்து வருகிறது. இந்த படை அமராவதி மாவட்டத்தில் நுழைந்துள்ளது. இதையடுத்து வார்தா, நாக்பூருக்கு சென்றுள்ளது. இந்த பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க ரசாயனங்களை பயிர்கள் மீது அடித்து வருகிறார்கள்.

பேரழிவு
கிழக்கு ஆப்பிரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியது போல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஆயத்தமாகி வருகின்றன. உலகிலேயே மிகவும் மோசமான புலம்பெயர் பூச்சியான லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளிகள் நேற்று படையெடுத்து வந்தன. 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை தாக்குகின்றன. இதனால் ராஜஸ்தானில் முதல் முறையாக ஆளில்லா விமானங்கள், விமானங்களை களம் இறக்கப்படவுள்ளன.

பஞ்சாப்
குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவை தயார் நிலையில் உள்ளன. ராஜஸ்தானில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள பயிர்களை இந்த பூச்சிகள் சேதப்படுத்திவிட்டன. இவற்றை அழிக்க ஆளில்லா விமானங்கள், செயற்கைகோள் கருவிகள், ஸ்ப்ரேயர்கள் ஆகியவற்றை மாநில எல்லைகளில் குவிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அது போல் தீயணைப்பு வாகனங்களை கொண்டு பயிர்களில் ரசாயனக் கருவி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கவலை
இந்த பூச்சிகளால் பூமியின் நிலத்தில் 20 சதவீதத்தை மிகவும் சாதுர்யமாக தாக்க முடியும். உலக மக்கள்தொகையில் 10-இல் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அளவு வல்லமை படைத்தது. இந்தியாவில் பொதுவாக இந்த பூச்சிகள் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை படையெடுத்து வரும். ஆனால் தற்போது இதன் வருகை முன்கூட்டியே உள்ளதால் கவலை அதிகமாக உள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் 90 நாட்கள் வரை வாழும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications