எல்லை தொடர்பான கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறுவதை தடுப்போம்: இந்தியா- சீனா கூட்டறிக்கை
டெல்லி: லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சீனாவுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் சீனா தொடர்ச்சியான ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லையில் 7-வது கட்ட பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாடுகளிடையே 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 7-வது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று இந்தியாவின் சூசுல் பகுதியில் நடைபெற்றது.

இருநாடுகள் கூட்டறிக்கை
இருநாடுகளிடையேயான ராணுவ கமாண்டர்கள் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பு சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

மோதல் தவிர்ப்பு
இதில், 7-ம் கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தன. இருநாடுகளும் எல்லைகள் தொடர்பான நிலைப்பாடுகளை புரிந்து கொள்ளவும் உதவியது. இருநாடுகளிடையே கருத்து வேறுபாடுகளை மோதல்களாக மாறும் சூழ்நிலையை தவிர்க்கவும் முடிவு செய்யபட்டது.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்
அடுத்தடுத்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இருதரப்பும் தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எல்லைகளில் படைகுவிப்பை சீனா திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications