எல்லை தொடர்பான கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறுவதை தடுப்போம்: இந்தியா- சீனா கூட்டறிக்கை
டெல்லி: லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சீனாவுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் சீனா தொடர்ச்சியான ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லையில் 7-வது கட்ட பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாடுகளிடையே 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 7-வது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று இந்தியாவின் சூசுல் பகுதியில் நடைபெற்றது.

இருநாடுகள் கூட்டறிக்கை
இருநாடுகளிடையேயான ராணுவ கமாண்டர்கள் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பு சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

மோதல் தவிர்ப்பு
இதில், 7-ம் கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தன. இருநாடுகளும் எல்லைகள் தொடர்பான நிலைப்பாடுகளை புரிந்து கொள்ளவும் உதவியது. இருநாடுகளிடையே கருத்து வேறுபாடுகளை மோதல்களாக மாறும் சூழ்நிலையை தவிர்க்கவும் முடிவு செய்யபட்டது.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்
அடுத்தடுத்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இருதரப்பும் தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எல்லைகளில் படைகுவிப்பை சீனா திரும்பப் பெற வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications