ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கதி என்ன? நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜனவரி 8-ல் கூடுகிறது!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து பரிசீலனை செய்வதற்கான நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, திமுகவின் பி.வில்சன், செல்வகணபதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டின் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக ' ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையே இல்லாத பாஜக தாக்கல் செய்த இந்த மசோதாவை எப்படி அனுமதிக்க முடியும்? என திமுகவின் டிஆர் பாலு எம்பி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த மசோதா நாட்டின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது எனவும் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் விமர்சித்திருந்தனர்.

அப்போது லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மசோதா மீது விரிவான விவாதம் நடத்த வேண்டும்; இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக தெரிவித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட மின்னணு வாக்கெடுப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் 20 பாஜக எம்.பிக்கள் பங்கேற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி எம்பி, திமுகவின் வில்சன், செல்வகணபதி உள்ளிட்ட 39 பேர் இடம் பெற்றிருந்தனர். பாஜக எம்பி செளத்ரி தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications