Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல்ஹாசன் பதவியேற்பை பார்க்க போன அந்த 3 பேர் யார் தெரியுமா..? சுவாரசிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாம் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதை நேரில் பார்ப்பதற்காக 3 பேரை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மூன்று பேர் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அப்போது கமல்ஹாசன் வெள்ளை சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து நாடாளுமன்றம் வந்தார்.

தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்ற இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன், வணக்கம் என்று பதவி ஏற்றுக் கொண்டார்.

Kamal Haasan Takes Oath as Rajya Sabha MP

கமல்ஹாசன் எனும் நான் என்று அவர் பதவியேற்றுக் கொண்ட வீடியோவை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் கமல்ஹாசன் பதவியேற்றதை அக்கட்சியின் நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் பார்த்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திரையுலகினரும், ரசிகர்களும், பொதுமக்களும் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னுடன் 3 பேரைப் பதவியேற்பு விழாவிற்கு நாடாளுமன்றம் அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி காலையில் நாடாளுமன்றத்திற்கு காரில் வந்த கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்தார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளரான அருணாச்சலம், மநீம துணைத் தலைவர் மெளரியா உள்ளிட்டோரையும் கமல்ஹாசன் அழைத்துச் சென்றுள்ளார்.

கமல்ஹாசன் பதவியேற்பின் போது இவர்கள் மூவரும் அடுத்த மாடத்தில் இருந்து நேரில் பார்வையிட்டிருக்கின்றனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார். சட்டசபையிலும் மநீம கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதனால் கமல்ஹாசனின் அடுத்த நோக்கம் திமுக கூட்டணியில் இருந்து சட்டசபைக்குத் தனது கட்சியினரை அனுப்புவதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+