கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.. நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.. உச்சநீதிமன்றம் வேதனை!
டெல்லி: கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கோரி தாக்கல் செய்ய பொதுநல வழக்கின் விசாரணையின் போது, கரூர் சம்பவத்தில் நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் தவெக நிர்வாகிகாளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து சுமார் 20 மணி நேரம் விசாரனை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின் தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ விசாரணைக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய இரு நாட்களும் தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினார். கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் இதுநாள் வரை கரூர் மாவட்டத்திற்கே செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து விஜய் சந்தித்தார்.
சிபிஐ விசாரணையின் போது தவெகவினர் பலரும் தமிழக அரசை குற்றம்சாட்டியதாக தெரிகிறது. அதேபோல் விஜய் தாமதமாக வந்தது ஏன்? தண்ணீர் பாட்டிலை தூக்கியெறிந்த போதும் கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா? கரூர் பிரச்சார தேதியை கடைசி நேரத்தில் மாற்றியது ஏன் என்றும் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. கரூர் சம்பவத்தில் தலையிட்டு நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம்











Click it and Unblock the Notifications