மெகுல் சோக்ஸியின் மோசடியில்.. மனைவி ப்ரிதி சோக்ஸின் முழு பங்களிப்பு உறுதி.. முக்கிய ஆவணங்கள் சிக்கின
டெல்லி: மெகுல் சோக்ஸியின் மோசடியில் அவரது மனைவி பெரும் பங்கு வகித்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் வைர வியாபாரி மெகுல் சோக்ஸி.
நாட்டையே உலுக்கிய இந்த மோசடி மன்னன் மெகுல் சோக்ஸி 2018-ஆம் ஆண்டு முதல் ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.

மோசடி மன்னன்
கடந்த மாத இறுதியில் ஆன்டிகுவாவில் உள்ள வீட்டிலிருந்து திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் 3 நாளில் டொமினிகாவில் சிக்கினார். மெகும் சோக்ஸியை (Mehul Choksi) நாடு திருப்பி அழைத்து வர, இந்தியா சட்ட ரீதியாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சிக்கிய ஆதாரம்
விரைவில் மெகுல் சோக்ஸி நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மெகுல் சோக்ஸிக்கு அடுத்த அடியாக அவரது மனைவி ப்ரிதி சோக்ஸின் மோசடியை நிரூபிக்க அமலாக்கத்துறைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

மிக முக்கிய பங்கு
மெகுல் சோக்சியின் மனைவி அவரது குற்றச் செயல்களில் தீவிர பங்காளியாக இருந்ததாகவும், முழு குற்றத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் ஆவணங்கள் கிடைத்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மாற்றுவதில் ப்ரிதி சோக்ஸி நேரடியாக ஈடுபட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன,

அடுத்தகட்ட நடவடிக்கை
துபாயில் சொத்துக்களை வாங்குவதற்காக பி.என்.பி மோசடி பணத்தை மாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துபாயில் மட்டும் 3 ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.391 கோடி பணத்தை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications