புதிய பாம்பன் பாலம்: காற்று வேகமாக வீசினால் தானியங்கி ரெட் சிக்னல்-ரூ550 கோடியில் கட்டப்பட்டது!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தை திறந்த வைத்தார் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்ட பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குள்ளான நிலையில் 6 ஆண்டுகளாக கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில்வே பாலம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

புதிய பாம்பன் பாலம் குறித்த சில தகவல்கள்:
- 1914-ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக் கால பொறியாளர்களால் பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்பட்டது.
- 2019-ம் ஆண்டு புதிய பாம்பன் ரயில்வே பால கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
- இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் கடல் பாலமான இந்த பாம்பன் பாலம் 2.07 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
- புதிய பாம்பன் பாலம், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) மூலம் கட்டப்பட்டது.
- 72.5 மீட்டர் வழிசெலுத்தல் இடைவெளியை 17 மீட்டர் வரை உயர்த்த முடியும். இது பெரிய கப்பல்கள் அடியில் செல்ல அனுமதிக்கிறது.
-புதிய பாலம் தற்போதுள்ள பாலத்தை விட 3 மீட்டர் உயரமானது. கடல் இணைப்பை மேம்படுத்துகிறது.
-துணை கட்டமைப்பு எதிர்காலத்தில் இரட்டை ரயில் தண்டவாளங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
-நவீன பொருட்கள், பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்துவது பாலத்தின் நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.
- இந்த பாலம் துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு, முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகளுடன் கட்டப்பட்டுள்ளது.
- சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. கடுமையான கடல் சூழலில் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.
#WATCH | Rameswaram, Tamil Nadu: PM Narendra Modi to inaugurate the New Pamban Bridge - India’s first vertical lift sea bridge and flag off Rameswaram-Tambaram (Chennai) new train service today, on the occasion of #RamNavami2025
— ANI (@ANI) April 6, 2025
(Visuals of the trial run being conducted ahead… pic.twitter.com/n8ArAgxgQ4
புதிய பாம்பன் பாலத்தின் தேவை என்ன?
21-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்ட பழைய பாலத்தால் நவீன போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதிகரித்து வரும் போக்குவரத்து, வேகமான, பாதுகாப்பான இணைப்பின் தேவையுடன் இணைந்து, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, நீடித்த, எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் ஒரு புதிய கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது.
புதிய பாம்பன் பாலம் பின்வருவனவற்றை உறுதி செய்யும்:
- மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து: கனரக ரயில் போக்குவரத்து, வேகமான ரயில்களுக்கு இடமளித்தல்.
- கடல்சார் ஒருங்கிணைப்பு: பெரிய கப்பல்களை இடையூறுகள் இல்லாமல் கடந்து செல்ல அனுமதித்தல்.
- குறைந்தபட்ச பராமரிப்புடன் 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை உறுதி செய்தல்.
- புதிய பாம்பன் பாலம், பாரம்பரியத்துடன் புதுமையை கலக்கும் இந்தியாவின் திறனின் அடையாளமாகும். சுற்றுச்சூழல், தொழில்நுட்ப சவால்களை சமாளித்து, இந்த அதிநவீன செங்குத்து தூக்கு ரயில் பாலம் நாட்டின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு திறன்களுக்கு பெருமைமிக்க சான்றாக நிற்கிறது. நவீன வடிவமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், பாலம் ஒரு முக்கியமான போக்குவரத்து இணைப்புக்கு புத்துயிர் அளிப்பது மட்டுமல்லாமல், பிராந்திய இணைப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் பலப்படுத்துகிறது.
ரயில் சேவைகளை தாமாக நிறுத்தும் தானியங்கி ரெட் சிக்னல்
பாம்பன் புதிய பாலம் குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக பாம்பன் கடற்பரப்பில் காலநிலையை எளிதாக கணித்துவிட முடியாது. திடீரென சுழற்காற்று வீசிக் கொண்டே இருக்கும் போதே அடுத்த சில நிமிடங்களில் வேறுவிதமான வானிலையை எதிர்கொள்ள நேரிடும். பாம்பன் பகுதியானது நிலநடுக்கம் மற்றும் புயல் தாக்குதல் அபாயம் உள்ள பகுதி. இவற்றையும் கவனத்தில் கொண்டுதான் புதிய பாம்பன் ரயில்வே பாலம், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கடற்பரப்பில் காற்றின் வேகம் 58 கிமீ-க்கு அதிகமாக இருந்தால் தானாகவே ரெட் சிக்னல் விழுந்து மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில் போக்குவரத்தை நிறுத்தக் கூடிய சிஸ்டம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications