கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு ஒன்றுபடுவோம் - பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் தசரா, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
டெல்லி: கொரோனா விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார் மோடி. கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு ஒன்றுபடுவோம் என மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாஸ்க் அணியுங்கள், கைகளை சுத்தமாக வைத்திருங்கள். என ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்தியா மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கு ஜன் அந்தோலன் என்கிற மக்கள் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் பண்டிகை நாட்கள் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 68 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,94,321 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 8.34 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 83,011 பேர் குணமடைந்த நிலையில், 78,524 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,27,704ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் சதவிகிதம் 85.25 சதவிகிதமாக உள்ளது.
आइए, कोरोना से लड़ने के लिए एकजुट हों!
— Narendra Modi (@narendramodi) October 8, 2020
हमेशा याद रखें:
मास्क जरूर पहनें।
हाथ साफ करते रहें।
सोशल डिस्टेंसिंग का पालन करें।
‘दो गज की दूरी’ रखें।
#Unite2FightCorona pic.twitter.com/L3wfaqlhDn
கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, 971 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications