லாக்டவுன் நீட்டிப்பா.. அப்பாடா.. நிதி ஆயோக் துணை தலைவர் சொல்வதை கேட்டால் மனசு குளிருது
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு லாக்டவுன் நடைமுறை இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒரு முக்கியமான தகவலை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பெரும்பாலான கட்சித் தலைவர்கள் 21 நாட்கள் லாக்டவுன் காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

லாக்டவுன் நீடிப்பு
திடீரென லாக்டவுன் நிலையை விலக்கிக் கொண்டால் பழையபடி நோய்த்தொற்று ஏற்படும், சமூக விலகலுக்கு நமது மக்கள் தொகை மிகுந்த நாட்டில் வழி கிடையாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால்தான், லாக்டவுன் காலகட்டம் அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஒரு தகவலை சொல்லி உள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பாருங்கள்.

மும்பை
இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று மையப் புள்ளியாக மும்பை நகரம் மாறியுள்ளது. மற்றொரு பக்கம் பார்த்தால் இந்த நாட்டில் 400 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட கிடையாது. எனவே எங்கே சரி செய்ய வேண்டுமோ அங்கே செய்ய வேண்டும். இதை மத்திய அரசு கண்டிப்பாக கவனிக்கும்.

62 மாவட்டங்களில் 80 சதவீத நோயாளிகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 62 மாவட்டங்களில் லாக்டவுன் நடைமுறையை தொடர்ந்து கொண்டு, மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த 62 மாவட்டங்களில்தான் மொத்த லாக்டவுன் வியாதி புள்ளி விவரப்படி, 80 சதவீத நோயாளிகள் இருக்கிறார்கள்.

ஒத்துழைப்பு
இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசின் பங்கு மிக அதிகம். மாவட்ட நிர்வாகங்கள் இந்த திட்டங்களில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புதான் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவும். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications