நாடு முழுவதும் ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் ஜனவரி 31 வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    #BREAKING ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு விதிகள் தொடரும்..!

    கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஒவ்வொரு மாதமும் புதிய தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    lockdown to be extended across the country till January 31: Home Ministry

    தளர்வுகளால் பேருந்து, ரயில், உள்நாட்டு விமான போக்குவரத்து இயல்பு நிலை அடைந்துள்ளது. இதேபோல் இபாஸ் சிஸ்டமும் ரத்தாகி இயல்பு நிலை திரும்பி உள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் இயங்கி வருகின்றன. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அனைத்து வணிக நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. கல்லூரிகள், பள்ளிகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. பள்ளிகள் அடுத்த மாதம் முதல் பல மாநிலங்களில்திறக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதம் வெளியிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீடிக்கும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு தனது புதிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+