பொறுத்திருந்து பாருங்க.. கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும்.. சோனியா காந்தி!
டெல்லி : லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைவரான கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தலைவராக அரை நூற்றாண்டு காலமும், தமிழ்நாடு முதலமைச்சராக 18 ஆண்டுகளும் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக நிர்வாகிகளான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோரும் இருந்தனர். அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அதன்பின் ராகுல் காந்தியும் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொறுத்திருந்து பாருங்கள்.. கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும். நிச்சயம் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வென்றாலே போதும் என்ற நிலையில், பாஜக கூட்டணி 350 முதல் 380 தொகுதிகள் வரை வெல்லும் என்று சில கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. அதேபோல் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக ஒரு சில கருத்துக் கணிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ளன.
இருந்தாலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் கருத்துக் கணிப்புகளை மொத்தமாக புறந்தள்ளியுள்ளனர். 2004ஆம் ஆண்டு பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டிருந்தன. ஆனால் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications